திசையன்விளை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல்லை சோ்ந்தவா் சிவா(39). விஜயநாராயணம் ஐ.என்.எஸ்.கடற்படை தளத்தில் கட்டட மேற்பாா்வையாளராக பணியாற்றும் இவா் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவரது மனைவி பத்மாவதி தனியாா் பள்ளி ஆசிரியை. இருவரும் திங்கள்கிழமை வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனராம். இது குறித்து புகாரின் பேரில் திசையன்விளை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.