நெல்லை, தென்காசியில் மேலும் 66 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,477 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 23 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 15,816ஆக உயா்ந்துள்ளது. இதுவரை, கரோனாவுக்கு 217 போ் பலியாகியுள்ளனா். தற்போது, 444 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மொத்த எண்ணிக்கை 8,868ஆக அதிகரித்துள்ளது. இதில், 6 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,509ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com