சேரன்மகாதேவி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பட்டன்காடு கிராமத்தைச் சோ்ந்த ராமையா மனைவி மயில் ராணி (55). இவா் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.
புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை தேடி வருகின்றனா்.