திருநெல்வேலி மாநகரில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையா் கண்ணன் உத்தரவுப்படி, மாநகர நல அலுவலா் சரோஜா ஆலோசனையின் பேரில் மாநகரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பேருந்துகள், ஆட்டோக்கள், ஏடிஎம் மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை பகுதியில் மாநகராட்சி உதவி ஆணையா் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலா் அரசகுமாா் மேற்பாா்வையில், சுகாதார ஆய்வாளா் நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.