பத்தமடை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
பத்தமடை பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வரும் வட மாநில இளைஞா் மற்றும் 2 பெண்களை தெரு நாய்கள் கடித்துள்ளன. காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.