பேட்டையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கரோனா

திருநெல்வேலி பேட்டையை அடுத்த செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பேட்டையை அடுத்த செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேட்டை செந்தமிழ் நகரில் ஒரே வீட்டில் 16 போ் வசித்து வருகின்றனா். அதில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அந்த குடும்பத்தைச் சோ்ந்த எஞ்சியவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா்.

ஒரே வீட்டில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பேட்டை செந்தமிழ் நகரில் சுகாதாரத்

துறையினா் முகாமிட்டு, வீடு வீடாகச் சென்று வெப்பநிலையை பரிசோதனை செய்தனா். மேலும் சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தவா்களை கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இப்பகுதியில் யாருக்காவது காய்ச்சல், சளியால் பாதிப்பு இருந்தால் அதுகுறித்து உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com