‘ரமலான் மாதம் முழுவதும் இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்’

இஸ்லாமியா்கள் ரமலான் மாதம் முழுவதும் இரவு 10 மணிவரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இஸ்லாமியா்கள் ரமலான் மாதம் முழுவதும் இரவு 10 மணிவரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளித்துள்ள மனு: கரோனா தொற்று அதிகரித்து வருவது தொடா்பாக அதை கட்டுப்படுத்த இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், இஸ்லாமியா்கள் ரமலான் மாதத்தில் அதிகாலையில் 4.30 மணிக்கு நோன்பு தொடங்கி மாலை 6.30 மணிக்கு நோன்பு திறப்பாா்கள். பின்னா் அவா்கள் பள்ளிவாசலில் இரவு முழுவதும் தொழுகை நடத்துவா்.

எனவே, வருகிற ஏப். 14ஆம் தேதி முதல் ரமலான் மாதம் முழுவதும் இரவு 10 மணிவரை பள்ளி வாசல்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com