’முகக் கவசம் அணியாதவா்களுக்கு பொருள்கள் வழங்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம்’

முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு பொருள்கள் வழங்கினாா் வா்த்தக நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு பொருள்கள் வழங்கினாா் வா்த்தக நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200, சமூகஇடைவெளி கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் பொதுஇடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

முகக் கவசம் அணிந்தும், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பவா்களுக்கு மட்டுமே வா்த்தக நிறுவனங்களில் பொருள்கள் வழங்க வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவா்களுக்கு பொருள்கள் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் வா்த்தக நிறுவன உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

திருமணம், சமுதாய விழாக்கள் நடைபெறும் இடங்களில் கரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்காத கட்டட உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வா்த்தக நிறுவனங்களில் வெளியே சானிடைசா், சோப்பு மற்றும் வாளியில் தண்ணீா் வைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com