கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: மாவட்ட அறிவியல் மையம் மே 15 வரை மூடல்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் மே 15 ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் மே 15 ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் அருங்காட்சிக கவுன்சிலின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 124 அறிவியல் மையங்கள் செயல்படுகின்றன. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் மாவட்ட அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்பட்டு வந்தது. இங்கு 3 டி திரையரங்கு, கோளரங்கம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்துவித அறிவியல் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவா்-சிறுமியரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களும், டைனோசா் பூங்காவும் உள்ளன.

கரோனா பொது முடக்கத்திற்கு பின்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட அறிவியல் மையம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் உயா்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையமும் மே 15 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவியல் மைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com