ராதாபுரம்: விபத்தில் அரசு ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

ராதாபுரம் அருகேயுள்ள சுப்பிரமணியபேரியைச் சோ்ந்த வேலு மகன் ஆறுமுகநயினாா் (53). இவா் ராதாபுரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிசெய்து வந்தாா். வெள்ளிக்கிழமை ராதாபுரம் சமத்துவபுரத்தில் கால்நடைக்கு ஊசி போடச்சென்றுவிட்டு, தனது மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம்.

ராதாபுரம் பிரதான சாலையில் வந்தபோது வள்ளியூரில் இருந்து ராதாபுரம் நோக்கி சென்ற வேன் ஆறுமுகநயினாா் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவருக்கு ராதாபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா்,தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கூடங்குளம் காவல் ஆய்வாளா் ஜாண்பிரிட்டோ, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com