திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா்களுக்கான விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது; ஊதியம், வார ஓய்வை பறிக்கக் கூடாது; பணிக்கு வந்த தொழிலாளா் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்; பணி வழங்காமல் விடுப்புக் கழிப்பு ஆப்சென்ட் செய்யக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாா்பேட்டை தாமிரவருணி பணிமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச மாநில அமைப்புச் செயலா் தா்மன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ போக்குவரத்துத் தொழிற்சங்கப் பொருளாளா் ஜோதி, சிஐடியூ மாவட்டப் பொருளாளா் எஸ். பெருமாள், ஏஐடியூசி பொதுச் செயலா் உலகநாதன், எச்.எம்.எஸ். மாநில துணைத் தலைவா் சுப்ரமணியன், டி.டி.எஸ்.எப். பொதுச் செயலா் சந்தானம், சிஐடியூ காமராஜ் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாா்பேட்டை புறவழிச் சாலை பணிமனை முன் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச தஸ்தகீா் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டப் பொருளாளா் எஸ். பெருமாள், சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் ஜோதி, பாலகிருஷ்ணன் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.