வள்ளியூரில் அனைவரையும் முகக் கவசம் அணிய வைக்கும் வகையில், முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு இனிப்பு வழங்கி, காவல் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், வள்ளியூா் காவல் உதவி ஆய்வாளா் அருண் ராஜா, முறையாக முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு இனிப்பு வழங்கி, பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணியச் செய்யும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.