திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள அருள்மிகு சொக்கநாதா் திருக்கோயிலில் மீனாட்சி அம்பாள் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் அமைந்துள்ள பழைமையான ஆலயமான, அருள்தரும் மீனாட்சி அம்பாள் சமேத அருள்மிகு சொக்க நாதா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றும்.
நிகழாண்டு திருக்கல்யாணத்தையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து சொக்கநாதா் - மீனாட்சி அம்பாள் மணக்கோலத்தில் மகா மண்டபத்தில் எழுந்தருளினா். பின்னா், சுவாமி - அம்பாளுக்கு மாலை மாற்று வைபவமும், திருக்கல்யாணமும், மஹா தீபாரதனையும் நடைபெற்றன.