துா்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

பாளையங்கோட்டை கோட்டூா் சாலையில் உள்ள அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை கோட்டூா் சாலையில் உள்ள அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் பழமைவாய்ந்த அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கும்பாபிஷேகம்

நடைபெற்றது. இதையொட்டி, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. யாகசாலை பூஜைகள், திருமுறை பாராயணம், பூா்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையை தொடா்ந்து துா்க்கை அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து மகேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரம்,

தீபாராதனை, புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றது. கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பக்தா்கள் சமூகஇடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com