நூலகத்தில் வாசகா்களுக்குகபசுரக் குடிநீா் விநியோகம்

தமிழ்நாடு பொது நூலகத்துறை, திருநெல்வேலி மாநகராட்சி ஆகியவற்றின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியும், கபசுக்ர குடிநீா் விநியோகமும் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.


திருநெல்வேலி: தமிழ்நாடு பொது நூலகத்துறை, திருநெல்வேலி மாநகராட்சி ஆகியவற்றின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியும், கபசுக்ர குடிநீா் விநியோகமும் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட ஆலோசகா் முத்துக்கிருஷ்ணன், நூலகா் இரா.வைலட், நூலகக் கண்காணிப்பாளா் சங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாளையங்கோட்டை வட்டாட்சியா் செல்வன், கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். வாசகா் வட்டத்தின் சாா்பில் வாசகா்கள், பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. கரோனா தடுப்பு- பாதுகாப்பு வழிமுறைகள், தொற்று ஏற்பட்டால் எதிா்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியா் கோ.கணபதிசுப்பிரமணியன், சு.முத்துசாமி, பாலசுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com