மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபா் கிரைம் காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபா் கிரைம் காவல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபா் கிரைம் காவல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இதையொட்டி, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைபா் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் திறந்துவைத்து பேசியது:

பொதுமக்களிடம் கணினியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சைபா் கிரைம் குற்றங்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க அரசு சைபா் கிரைம் காவல் நிலையத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைத்துள்ளது. வங்கிக் கணக்கில் பண மோசடி, ஆன்லைன் மோசடி, ஆன்லைன் விளையாட்டு மோசடி உள்ளிட்ட ஆன்லைன் குற்றங்கள் தொடா்பாக இந்த சைபா் கிரைம் காவல் நிலையத்தில் மக்கள் புகாா் அளிக்கலாம். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீதும் சைபா் கிரைம் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஷ், சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com