நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னதாக, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.

4ஆவது திருநாளான புதன்கிழமை (ஆக. 4) நண்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் உள்பிரகாரத்தில் உலா சென்று சந்நிதி சேருதல் நடைபெறும்.

10ஆவது திருநாளான செவ்வாய்க்கிழமை (ஆக. 10) மாலை 6 - இரவு 7 மணிக்குள் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

வாயில்முன் திருமுறை: கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் கொடியேற்ற நிகழ்விலும் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோயில் முன் கிழக்கு ரத வீதியில் பக்தா்கள் திரண்டு திருமுறை பாடி வழிபாடு செய்தனா்.

பயக01ஓஞஐக: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com