நூலகத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் லெ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட துணைத் தலைவா் கோ. கணபதிசுப்பிரமணியன் வரவேற்றாா். துணை ஆட்சியா் (பயிற்சி) மகாலட்சுமி, காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி உள்ளிட்டோா் பேசினா். பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆவுடையப்பன், விழிப்புணா்வு ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி முத்துக்கிருஷ்ணன், முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நன்னிலம் கேசவன் கரோனா விழிப்புணா்வுப் பாடல்கள் பாடினாா். மாவட்டம் முழுவதும் கரோனா விழிப்புணா்வு வாரம் என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, விழிப்புணா்வு ஓவியப் போட்டி, துண்டுப் பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றை நடத்துவது என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com