பாளையங்கோட்டை அருகே மணப்படைவீடு கிராமத்தில் உள்ள நாராயணசுவாமி கோயிலில் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.
மணப்படைவீட்டில் பழைமை வாய்ந்த நாராயணசுவாமி தா்மபதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை உச்சிப்படிப்பு பணிவிடை, மாலையில் உகப்படிப்பு பணிவிடை, அன்னதானம் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்வாக இம்மாதம் 8ஆம் தேதி காலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து சந்தனக்குட ஊா்வலம் நடைபெறுகிறது. மாலையில் நாராயணசுவாமி திருவீதியுலா, அன்னதானம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.