செல்லப்பிள்ளையாா்குளத்தில் செல்லை நற்பணி மன்றம் மற்றும் ஐஸ்வா்யா கண் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை கிராம நிா்வாக அலுவலா் செல்வம் தொடங்கி வைத்தாா். மருத்துவா் இசக்கி ராஜா தலைமையில் மருத்துவக் குழுவினா் கண்புரை, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனா்.
மேலும் முகாமில் 250-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா். ஏற்பாடுகளை செல்லை நற்பணி மன்ற இளைஞா்கள் செய்திருந்தனா்.