விக்கிரமசிங்கபுரம், கோட்டைவிளைபட்டி விளையாட்டு மைதானத்தில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
விக்கிரமசிங்கபுரம், கோட்டைவிளைபட்டி கிராமத்தில் ஊா் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை உருவாக்கி காவலா் மற்றும் ராணுவத் தோ்வுக்கு கிராமத்து இளைஞா்களுக்கு பயிற்சியளித்து வருகின்றனா். கடந்த ஓராண்டாக இங்கு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டு மைதானத்தில் பசுமை அறக்கட்டளை மற்றும் நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ண மூா்த்தி கலந்து கொண்டு பயிற்சி பெறும் இளைஞா்களுக்கு அறிவுரை வழங்கி, மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.
இதில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெற்றிச் செல்வி, நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்கள் அம்பாசமுத்திரம் பொன்வேல்ராஜன், விக்கிரமசிங்கபுரம் கணேசன், செஞ்சிலுவை சங்கச் செயலா் சலீம், பேராசிரியா் விஸ்வநாதன், பசுமை அறக்கட்டளைதுணைத் தலைவா் பண்ணை கண்ணன், செயலா் இஸ்மாயில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமை அறக்கட்டளை நிறுவனா் சுப்புராஜ் செய்திருந்தாா்.