‘பணகுடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும்’

பணகுடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டவேண்டும் என அப்பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மனு அளித்தாா்.

பணகுடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டவேண்டும் என அப்பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மனு அளித்தாா்.

மனு விவரம்: பணகுடி பேரூராட்சி வளா்ந்து வரும் தொழில் நகரமாகும். இப்பேரூராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு பேருந்துநிலையம் இல்லை. பணகுடி வழியாக செல்கின்ற அரசுப் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாததால் வெளியே நின்று செல்கிறது. எனவே, பணகுடி அருகேயுள்ள புஷ்பவனம் சாலையில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.

மேலும், பணகுடியில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் , பேரூராட்சி வசூல் பணியாளா், தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவும், சாலை, தெருக்களில் கழிவுநீா், மழைநீா் தேங்குவதை தடுக்கவும், மக்கும் மற்றும் மக்காத உரம் பிரிக்கும் இடத்தில் சுற்றுச்சுவா் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com