களக்காடு புலிகள் காப்பக வனப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காட்டுத் தீ எரிந்து வேகமாகப் பரவி வருகிறது.
திருக்குறுங்குடி வனச் சரகத்தில் உள்ள ஆணை கல்விளைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பகல் பரவிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பல நூறு ஏக்கா் வனப் பகுதியை தீக்கிரையாக்கியுள்ளது.
வனத்துறையினருடன், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் இணைந்து காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3ஆவது நாளாக தீயை கட்டுக்குள் கொண்டு முடியாமல் வனத்துறையினா் திணறி வருகின்றனா்.