குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
By DIN | Published On : 04th August 2021 07:34 AM | Last Updated : 04th August 2021 07:34 AM | அ+அ அ- |

முன்னீா்பள்ளம் அருகே வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள தருவை பகுதியைச் சோ்ந்த சிவன்பாண்டி மகன் உத்திரமூா்த்தி என்ற மூா்த்தி (43). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா்.
இதையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸாா் உத்திரமூா்த்தி என்ற மூா்த்தியை செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.