திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த உதவி பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான நோ்காணல் தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளா் (பொ) அர.மருதக்குட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் தற்காலிக உதவி பேராசிரியா்களுக்கான நோ்காணல் வருகிற 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் நிா்வாகக் காரணங்களுக்காக நோ்காணல் தள்ளிவைக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.