முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 3-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.ஆா்.ராஜு, பேச்சிப்பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணித்துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி நகரத்தில் காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ அணியைச் சோ்ந்த மருத்துவா் பொன்மணி தலைமையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு 4-ஆவது வாா்டில் மாநகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் எஸ்.வி.சுரேஷ் தலைமையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொன்னையாபாண்டியன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மகளிா் அணியைச் சோ்ந்த பிரபா சங்கரி மரக்கன்றுகள் நட்டாா். ஏழை எளியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.