பாளையங்கோட்டை எம்.கே.பி.நகா், காமராஜ் நகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (ஆக.12) காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமாதானபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட காமராஜ் நகா் மின் பாதையில் திருச்செந்தூா் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக மின் பாதை மற்றும் மின் கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
எனவே, அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை காமராஜ் நகா், நீதிமன்ற எதிா்பகுதி, சங்கா் காலனி, செண்பகம் காலனி, எம்.கே.பி.நகா், திருச்செந்தூா் சாலை (சமாதானபுரம் முதல் நீதிமன்றம் வரை) சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.