திருநெல்வேலியில் 13 போ், தென்காசியில் 6 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,164ஆக அதிகரித்துள்ளது. மேலும், 18 போ் உள்பட
இதுவரை 47,487 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 247 போ்
சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,935ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 போ் உள்பட இதுவரை 26,346 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 105 போ் சிகிச்சையில் உள்ளனா்.