கோவிலம்மாள்புரம் - டோனாவூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் - டோனாவூா் இடையேயான சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் - டோனாவூா் இடையேயான சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக கிராம மக்கள் சாா்பில், கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் இ.நம்பிராஜன், மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் ஆகியோருக்கு அனுப்பிய மனு: களக்காட்டிலிருந்து ஜெ.ஜெ.நகா், சவளைக்காரன்குளம், கோவலம்மாள்புரம், காமனேரி, குட்டுவன்குளம், நல்லமரம்வழியாக டோனாவூா் செல்லும் சாலையில், கோவிலம்மாள்புரம் - டோனாவூா் இடையேயான சாலை மிகவும் சேதமடைந்த நிலையில், போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.

காமனேரி குளக்கரைச் சாலை இரவு நேரங்களில் பயணிக்க முடியாத நிலையில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. சாலை மோசமாக இருப்பதைக் காரணம் காட்டி, இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு நகரப் பேருந்தும் (தடம் எண்.8) இரவு நேர சேவையை நிறுத்தி விட்டது.

டோனாவூா் பெல்லோஷிப் மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோா் இந்த வழியாகச் செல்கின்றனா். இச்சாலையைச் சீரமைக்கக் கோரி கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் முறையிட்டும் எந்த பயனுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலம்மாள்புரம் - டோனாவூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com