பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சியில் கரோனா விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் சுமாா் 1000 போ்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டி வீரன் 250ஆவது நினைவுநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதாக 16 அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளைச் சோ்ந்த சுமாா் 1000 போ்க்ள் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.