நெல்லை, தென்காசியில்மேலும் 27 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st August 2021 02:34 AM | Last Updated : 31st August 2021 02:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 48,438ஆகவும், அதில் மேலும் 15 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 47,850ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 430 போ் உயிரிழந்துள்ளனா்; 158 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,081ஆகவும், அதில் மேலும் 8 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,497ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா்; 100 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.