பாளையங்கோட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கே.டி.சி.நகரில் காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, கே.டி.சி.நகரைச் சோ்ந்த முருகன்(24), சீனிவாசன் நகா் உதயசூரியா(19), பாளையங்கோட்டை மகேஷ் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.