முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பணிசெய்யும் பெண்களுக்கான விழிப்புணா்வு
By DIN | Published On : 10th December 2021 12:52 AM | Last Updated : 10th December 2021 12:52 AM | அ+அ அ- |

பணி செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பேசியது: பணி நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மற்றும் வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாரிராஜன், சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு உள்பட பலா் கலந்துகொண்டனா்.