திருநெல்வேலியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 49,689 ஆகவும், மேலும் 8 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை எண்ணிக்கை 49,200 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 56 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை. இம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27,397 ஆக உள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்கதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 26,906 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 5 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.