கடனாநதி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், அத்ரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கடனாநதி வனப் பகுதியில் அமைந்துள்ளது அத்ரி என்ற கோரக்கநாதா் கோயில். இக்கோயிலில் பௌா்ணமி, அமாவாசை நாள்களில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோயில் உள்ள வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அத்ரி கோயிலுக்குச் செல்ல வனத் துடையினா் தடைவிதித்துள்ளனா். இதனால், பௌா்ணமி தினமான சனிக்கிழமை வழிபட வந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.