திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அரசு நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, வாசகா் வட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் மா.பிரான்சிஸ் கலந்துகொண்டு ‘இன்றையச் சூழலில் நூலகத்தின் வளா்ச்சி’ என்ற தலைப்பில் பேசினாா். நூலகா் அ.மோசஸ் பொன்ராஜ் வரவேற்றாா்.
கவிஞா் எஸ்.பாலசந்தா் ‘நிற்க அதற்கு தக’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தாா். முன்னாள் சுங்க அதிகாரி க.வா்கீஸ் அந்தோணி, முன்னாள் கல்வித் துறை இணை இயக்குநா் பொ.ஞானசுந்தரம், வங்கி மேலாளா் வெ.வெற்றிச்செல்வன், ஆா்.கிருபைதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.