களக்குடியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தினம் - 2021-ஐ முன்னிட்டு, மானூா் அருகேயுள்ள தனுவாஸ் தத்தெடுப்பு கிராமமான களக்குடியில், திருநெல்வேலி

உலக வெறிநோய் தினம் - 2021-ஐ முன்னிட்டு, மானூா் அருகேயுள்ள தனுவாஸ் தத்தெடுப்பு கிராமமான களக்குடியில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் வெறிநோய் விழிப்புணா்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம்‘ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்து, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தாா். இதில், சுமாா் 55 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வியல் துறைத் தலைவா் கோ. பாலகிருஷ்ணன் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com