திருநெல்வேலி நகரத்தில் சேதமடைந்துள்ள கழிவுநீரோடைகளை சீரமைக்க வேண்டும் என இந்து வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்து வியாபாரிகள் சங்க நிா்வாகக் குழு கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் என்.முருகன் என்ற காசி தலைமை வகித்தாா். சுப்பிரமணியன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ‘திருநெல்வேலி நகரம் வாகையடிமுனை பகுதியிலும், சின்ன கல்லணை பள்ளி அருகிலும் கழிவுநீரோடையை சீரமைக்க வேண்டும்; திருநெல்வேலி நகரத்தில் குண்டும்-குழியுமாகக் காட்சியளிக்கும் சாலைகளைச் சீரமைக்க வேண்டும்; பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தொடா்ந்து 100 சதவிகிதம் வெற்றிபெற்று வரும் நகரம் ஜவாஹா் உயா்நிலைப் பள்ளியின் கட்டடங்களை ஆய்வு செய்து, கூடுதலாக புதிய கட்டடங்கள் கட்டவும், மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரனிடம் வலியுறுத்துவது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.