வட்டாரக் கல்வி அலுவலா்கள் இடமாறுதல் கலந்தாய்வு

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி முன்னிலையில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட 16 வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்தாய்வில் பங்கேற்றனா். பணிமூப்பு அடிப்படையில் தங்களுக்கு தேவையான மாறுதல் பணியிடத்தை தோ்வு செய்தனா். காலையில் மாவட்ட அளவிலான கலந்தாய்வும், பிற்பகலில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வும் நடைபெற்றது.

திருநெல்வேலி கல்வி மாவட்ட அலுவலா் வசந்தா, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் டைட்டஸ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பணியில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com