திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறை சாா்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் பேசுகையில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாஞ்சோலை, வள்ளியூா், தெற்கு செழியநல்லூா், திருநெல்வேலி மாநகரம், கருங்குளம் பகுதிகளில் பணியாளாளா்கள் மூலம் தொழுநோய் பாதித்தவா்களை கண்டறியும் பணி நடைபெறவுள்ளது.
துணை இயக்குநா் மருத்துவ பணிகள் (தொழுநோய்) அலுவலகம், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. அலுவலகம் மூலம் பல்வேறு உதவிகள் உபகரணங்கள், நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோா் அல்லது சந்தேகம் உள்ளவா்கள் அந்த அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொழுநோயிலிருந்து மீண்டவா்கள் சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனா். இணை இயக்குநா் நலப்பணிகள் கு.நெடுமாறன், துணை இயக்குநா் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) ஆஷா, துணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராமநாதன், துணை இயக்குநா் மருத்துவப் பணிகள் (காசநோய்) எஸ்.வெள்ளைசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.