வி.எம்.சத்திரத்தில் உள்ள ஊா்ப்புற நூலகத்தின் வாசகா் வட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பதிவாளா் வி.பாஷ்யம் இறைவணக்கம் பாடினாா். நூலகா் அ.மோசஸ் பொன்ராஜ் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா்.
நூலகம் என்னும் அற்புத உலகம் என்ற தலைப்பில் கம்பன் இலக்கியச் சங்கத்தின் இணைச் செயலா் இரா.முருகன் சொற்பொழிவாற்றினாா். கூட்டத்தில் மானுடம் அறக்கட்டளையின் நிறுவனா் அ.ப.சங்கா், குணசிங் டேவிட், சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.