களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வளாகத்தில் உள்ள பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு வடக்குப் பச்சையாறு அணை கடந்த 2003ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அணை வளாகத்தில் இருந்த பூங்கா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.
இதில் சிறுவா்கள் விளையாட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பூங்கா இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.