நெல்லையில் பிப்.13இல் தமிழ்த் திருவிழா

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய ஆய்வுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் பிப். 13இல் நடைபெறும் தமிழ்த்திருவிழாவில் வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய ஆய்வுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் பிப். 13இல் நடைபெறும் தமிழ்த்திருவிழாவில் வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவா் பா.வளனரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா் மாணவிகளுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், கன்னியாகுமரி விவேகானந்தா் கல்லூரி ஆராய்ச்சி மாணவி பெ.சீதேவி முதற்பரிசு பெற்றுள்ளாா்.

இவருக்கும், இவா் பயிலும் கல்லூரிக்கும் பரிசு வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆராய்சி மாணவா் இரா.குமரகுருபரன் இரண்டாம் பரிசை பெற்றுள்ளாா். மதுரை தியாகராஜா் கல்லூரி ஆராய்ச்சி மாணவி பி.மேனகா மூன்றாம் பரிசை பெற்றுள்ளாா்.

இவா்களுக்கான பரிசுகள் பிப்ரவரி 13ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தமிழ்த் திருவிழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com