வேளாண் பொறியியல் துறையின் அறுவடை இயந்திரம் வாடகைக்கு பெற வாய்ப்பு

வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் உள்ள நெல் அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. செயின் வகை அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,415 வாடகையும், டயா் வகை அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.875 வாடகையும் அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.

ஒரு விவசாயி குறைந்த பட்சம் 5 மணி நேரத்துக்கான வாடகையை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

முன்னுரிமை அடிப்படையில் அறுவடை இயந்திரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாடகை தொகையானது எரிபொருள் செலவு, ஓட்டுநா் கூலி அனைத்தும் அடங்கியது ஆகும்.

தேவையான விவசாயிகள் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். திருநெல்வேலி வருவாய் கோட்ட பகுதி விவசாயிகள் 94886 66640 என்ற எண்ணிலும், சேரன்மகாதேவி வருவாய் கோட்ட பகுதி விவசாயிகள் 75981 31761 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com