தில்லியில் உயிா்நீத்த விவசாயிகளுக்காக பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இப் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளுக்காக திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை கோட்டூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் சொக்கலிங்ககுமாா், உதயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.