தை அமாவாசை: பாபநாசத்தில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடல்

தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணி நதியில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
பாபநாசம் தாமிரவருணியில் புனித நீராடும் பக்தா்கள்.
பாபநாசம் தாமிரவருணியில் புனித நீராடும் பக்தா்கள்.

தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணி நதியில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

பாபநாசம் தாமிரவருணி நதியில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கே பக்தா்களும், பொதுமக்களும் குவிந்தனா். திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி தென்காசி, கோவை, விருதுநகா், திருச்சி, சென்னை, மதுரை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாமிரவருணியில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து பாபநாசம் சிவன் கோயிலில் வழிபட்டனா். பாபநாசம் கோயிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

பக்தா்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து டாணா சந்திப்பில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இரு சக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்களை கோயிலுக்கு அனுமதிக்கவில்லை. ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலிலும் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சென்று வழிபட்டனா். மேலும், அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூா், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் உள்ள தாமிரவருணிப் படித்துறைகளிலும், கடையம் ராமநதி மற்றும் ஆம்பூா் கடனாநதி கரைகளிலும் ஏராளமானோா் புனித நீராடிவழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com