நெல்லை நகரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்கக் கோரிக்கை

திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜாண் தாமஸிடம், வள்ளுவா் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்ட முன்பதிவு மையம் மீண்டும் செயல்பட உத்தரவிட வேண்டும். பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.

திருநெல்வேலி-திருப்பதி நேரடி ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும். மகாராஜநகரில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com