திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜாண் தாமஸிடம், வள்ளுவா் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்ட முன்பதிவு மையம் மீண்டும் செயல்பட உத்தரவிட வேண்டும். பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.
திருநெல்வேலி-திருப்பதி நேரடி ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும். மகாராஜநகரில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.