பாளையங்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிருபா நகா் முத்துச்சாமி மகன் ஆறுமுகம்(36). இவா் புதன்கிழமை சீவலப்பேரி சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.