திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகளிடம் செல்லிடப்பேசியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை தனியாா் கல்லூரியில் படித்துவரும் மாணவிகள் சாந்தி, சக்திமாரி. இவா்கள், வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் பேருந்தில் பயணம் செய்தனராம். அப்போது கூட்ட நெரிசலில் சாந்தி, சக்திமாரி ஆகியோரின் செல்லிடப்பேசிகளும் திருடு போனதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.