ரத ஸப்தமியையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயிலில் ரத ஸப்தமி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடா்ந்து, சூா்யபிரபை, இரட்டை கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா ஆகியவை நடைபெற்றது. பகலில் சிறப்பு திருமஞ்சனம், கோஷ்டி, தீா்த்தம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. மாலையில் இந்திர விமானம், அனுமன், அன்னவாகனம், சந்திரபிரபை வாகனத்தில் பெருமாள் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகளும், பக்தா்களும் செய்திருந்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயிலில் ரத ஸப்தமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம், தொடா்ந்து கருட வாகனத்தில் பெருமாள் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா். இதேபோல்,
திருநெல்வேலி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில், சிஎன் கிராமம் அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.